Saturday, May 20, 2023

தினம் ஒரு திருத்தலம்.. கறுப்பு⚫.. வெள்ளையாய்⚪ நிறம் மாறும் அதிசய விநாயகர்..!!

தினம் ஒரு திருத்தலம்.. கறுப்பு⚫.. வெள்ளையாய்⚪ நிறம் மாறும் அதிசய விநாயகர்..!! அருள்மிகு கேரளபுரம் விநாயகர் திருக்கோயில்...!! 


 🌈 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு கேரளபுரம் விநாயகர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க... இந்த கோயில் எங்கு உள்ளது? 🌈 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கேரளபுரம் என்னும் ஊரில் அருள்மிகு கேரளபுரம் விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? 🌈 கன்னியாகுமரியிலிருந்து 34 கி.மீ தொலைவில் கேரளபுரம் என்னும் ஊர் அமைந்துள்ளது. கேரளபுரத்திலிருந்து சிறிது தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் சிறப்புகள் என்ன? 🌈 இக்கோயிலின் பிரதான இறைவனாக விநாயகர் அருள்பாலிக்கிறார். 🌈 இந்த கோயிலின் விநாயகர் விக்கிரகம் அபூர்வமான இந்திர காந்த கல் வகையை சார்ந்தது ஆகும். 🌈 கேரளபுரத்தில் அரசமரத்தடியில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் தை முதல் ஆனி மாதம் வரையில் உத்தராயண காலத்தில் வெள்ளை நிறமாகவும், ஆடி முதல் மார்கழி வரையில் தட்சிணாய காலத்தில் கறுப்பு நிறமாகவும் நிறம் மாறி காட்சியளிப்பது இக்கோயிலில் தனிச்சிறப்பு ஆகும். 🌈 முதல் ஆறு மாதம் வெள்ளை நிறமாக இருக்கும் விநாயகர் திருமேனியில் ஆடி மாத ஆரம்பத்தில் கறுப்பு புள்ளிகள் ஏற்படுகின்றன. பிறகு தொடர்ந்து சிறிது சிறிதாக கறுப்பு நிறம் சூடுகிறார் என்பது அபூர்வமான நிகழ்வு ஆகும். வேறென்ன சிறப்பு? 🌈 மேற்கூரை இல்லாமல் அரசமரத்தடியில் அமர்ந்து இருக்கும் இந்த விநாயகரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 🌈 அரசமரத்தடியில் அமர்ந்து இருக்கும் இந்த விநாயகர் ஆரம்ப காலத்தில் ஆறு அங்குலம் அளவு இருந்தார். ஆனால், தற்போது பதினெட்டு அங்குலம் வளர்ந்து கம்பீரமாக திகழ்கிறார். 🌈 இத்தலத்தில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் பல அதிசயமான நிகழ்வுகள் நடக்கின்றன. இதனை இங்கு வரும் பக்தர்கள் விநாயகரின் விளையாட்டு என்று கொள்கின்றனர். 🌈 சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இந்த கேரளபுரம் விநாயகர் கோயில் விளங்குகிறது. என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது? 🌈 விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி ஆகியவை இங்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது? 🌈 வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி வளமான வாழ்வு கிடைக்க இங்குள்ள விநாயகரை பிரார்த்தனை செய்கின்றனர். இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது? 🌈 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

No comments:

Post a Comment